Sunday, April 19, 2015

விகடனில் வந்த என் கவிதை

எனக்கு எல்லாமும் தெரியும்
என்று ஒருபோதும்
சொல்வதில்லை
எல்லாமும் தெரிந்தவன்...
உயர்ந்தோங்கிய
மலையின் மாண்பிலிருந்து
பேரிரைச்சலால்
கீழிறங்கிவிடுகிறது அருவி..
தவளைகளின் பல்வகைக்
கத்தல்கள் என்றைக்கும்
இசையானதில்லை.
ஆனாலும் ஆரவாரமும்
ஆர்ப்பாட்டமும் மிக்கதுகள்
தவளைகளை மதிப்பிற்குரியனவாக
மாற்றிவிடுகின்றன..
தேர்ந்த கல்லின்
தேர்ந்த சிலை உணர்த்தும்
தேர்ந்த சிற்பியைப் போல
பலர் இந்த உலகின்
மனித வாழ்வை
செதுக்கிக் கொண்டே
இருக்கிறார்கள்...
நன்றி... ஆனந்தவிகடன்