Sunday, November 8, 2015

தீபாவளி...தீபாவளி..




                       தீபாவளி... தீப ஒளி... தீயவை ஒளி..(ழி),,,


                       எல்லோரையும் எப்படியேனும் சில கணங்களேனும் மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது தீபாவளி திருநாள்.

                        எல்லோரும் புத்தாடை உடுத்துகிறார்கள்.

                        கொஞ்ச நேரம் கவலைகளை மூட்டை கட்டி வைக்கிறார்கள். யாரிடமும் கோபம் காட்டாமல் இருக்கிறார்கள்.  கோபம் வந்தாலும் மறைத்துக்கொள்கிறார்கள். உறவுகளின் வீடுகளுக்குப் பலகாரங்களை எடுத்துப்போய் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

                           ஒரு தெருவில் உள்ள எல்லா வீடுகளிலும் எல்லார் வீட்டுப் பலகாரங்களும் சுவைக்கக் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் மறக்கிறார்கள். மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

                          நன்றி சொல்லவேண்டும் தீபாவளி திருநாளுக்கு..


                         தீபாவளி திருநாளில்....

                         காவல் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிற காவல் துறை அதிகாரிகளுக்கு...

                          பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கிற நடத்துநர் ஓட்டுநர்களுக்கு...

                          யாருக்கேனும் உடல் நலமில்லாமல் மருத்துவமனைக்கு விரைந்துகொண்டிருக்கிற 108 ஐ இயக்கும் பணியாளர்களுக்கு..

                            நாளைக் கொண்டாடலாம் என்று எண்ணும்போது மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நோயில் துன்பப்படுவோர்க்கு..

                            தீபாவளி அன்றும் பணத்தால் சண்டையிட்டுக்கொண்டு தவிக்கும் ஏழை.. வழியற்றோருக்கு...

                              இப்படி இன்னொரு பக்கமும் இருக்கிறது.. அவர்களின் துன்பங்கள் தொலையவேண்டும் என்று ஒரு விளக்கும்... மத்தாப்பும்.. ஏற்றுவோம் ஒளியாக..

                              வாசலில் வந்து கையேந்துவோருக்கு உங்களால் முடிந்ததைத் தாருங்கள்..
                               பலகாரமோ... பட்டாசோ... சில்லறை காசுகளோ.. சிறு உடைகளோ... புன்னகையோ எதுவோ அதைத் தாருங்கள்..

                               படைப்பாளச் சகோதரர்கள்..

                               நல்ல கவிதை எழுதுங்கள்.. நல்ல சிறுகதை எழுதுங்கள்.. நல்ல கட்டுரை எழுதுங்கள்.. நல்ல செய்திகளை உலகறியத் தாருங்கள்..
                             
                               எண்ணத்தில் வண்ணமும்
                               ஏற்றத்தில் உயர்வும்
                               மாற்றத்தில் புதுமையும்
                               புதுமையில் பயனும்
                               பயனில் பொதுமையும்
                               பொதுமையில் தியாகமும்
                              தியாகத்தில் செம்மையும்
                               செம்மையில் பெருமையும்
                               பெருமையில் பேறும்
                               பேற்றில் வாழ்வும்
                               வாழ்வில் வளமும்
                               வளத்தில் தூய்மையும்
                               தூய்மையில் ஒளியும்
                               ஒளிரட்டும உலகெங்கும்...


                     வலைப்பதிவு சகோதர சகோதரிகளுக்குத் தீபாவளி வாழ்த்துக்கள்..



8 comments:

  1. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. நல்லவற்றை மிகவும் நயம்படச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்ல யோசனை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நன்றி ஐயா
    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களின் 'பேருந்தில்' பயணித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் எனது கருத்துரையை எழுதுவேன். அதற்குள் தீபாவளி வந்துவிட்டது. நாளை மாலை கடலூர்-புதுச்சேரி-காரைக்கால் அருகே புயல் கரையைக் கடக்கும் என்று ரமணன் கூறியிருக்கிறார். (சில நேரங்களில் ரமணன் கூறுவதும் நடப்பதுண்டு). பாதுகாப்போடு பயணிக்கவும். தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  6. அன்புள்ள செல்லப்பா ஐயா அவர்களுக்கு,,

    வணக்கம். பொறுமையாகப் படித்துவிட்டு எழுதவும். என்னதான் முயன்றும் தொடக்கத்தில் அச்சுப்பிழைகள் நிறைய இருந்தன. அவற்றை ஜெயக்குமார் உதவியோடு குறிப்பிட்டு அச்சுக்குத் தந்தேன். அதில் வெகுவாகக் குறைக்கப்பட்டு மேலும் சில அச்சுப்பிழைகள் வந்துவிட்டன. அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மறுபதிப்பில் இன்னும் சற்று கூடுதலாகப் பக்கங்களைச் சேர்த்து சற்று மாற்றங்களுடன் பேருந்து பிழையின்றி ஓடும். நன்றிகள்.

    ReplyDelete
  7. நானும் இப்படிப்பட்டவர்களைப் பற்றி நிறைய சிந்தித்திருக்கிறேன். அந்த சிந்தனையை எழுத்தாக்கியிருக்கிறீர்கள். அருமை!
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete