சுதந்திர தினத்தன்று ஏதேனும் பதிவிடவேண்டும் என்று எண்ணியபோது அதற்கான நேரம் அமையவில்லை. இருப்பினும் ஏதேனும் சொல்லவேண்டும் என்கிற உந்துதல் இந்தப் பதிவாகும்.
விவேகானந்தர் சொன்னார்.....
எவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ
அவனே சுதந்திரமான மனிதன்.
எப்போதும் இது எனக்குப் பிடித்தமான வரிகள்.
அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல்...காயப்படுத்தாமல்... அடுத்தவர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்து நடந்துகொள்கிற யாருக்கும் சுதந்திரம் என்பது வரமாகும். அவரவர்க்கான கருத்து சுதந்திரம் என்பதோடு இது உடலளவிலும் மனதளவிலும் இன்னல்களை உருவாக்காமல் இருக்கவேண்டும் என்பதும் சுதந்திரத்தின்பாற்படும்.
கணவன் மனைவியை மதித்தல்.
மனைவி கணவனை மதித்தல்.
அப்பா மகன் உறவுகளைப் பேணுதல்
அண்ணன் தங்கை பகிர்ந்துகொள்ளல்
நட்புகளிடம் உணமையாக இருத்தல்..
இது எல்லாமுமே சுதந்திரத்தின் வெவ்வேறு அடையாளங்களே... இன்னும் நிறைய இருக்கின்றன இருப்பினும் கொஞ்சமாகவே பகிரல்.
இது நமது தேசம்.
31 மாநிலங்கள்..16 மொழிகள்...6 மதங்கள்...6400 சாதிகள்... 29 விழாக்கள்.. எல்லாம் உள்ளடக்கி ஒரே தேசமாய் இயங்கும் தேசம் நமது பாரத தேசம்.
எல்லாவற்றையும் நேசிப்போம்.
மானுடப் பிறப்பெடுத்தோம்
மானுடப் பண்பெடுப்போம்
மானுட செயல்கொண்டு
மானுடராய் மரிப்போம்
மகத்தான தேசத் தொண்டாற்றி...
வந்தே மாதரம்...
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இவைகளும் சுதந்திரமும் விடுதலையும் பெறவேண்டும்..