Thursday, April 21, 2011

மகிழ்ச்சியும் வருத்தமும்

மகிழ்ச்சியும் வருத்தமும்


நிகழ்வு ஒன்று.

வினாயக் சென் வெளியில் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது நிபந்தனை ஜாமின் எனும்போது வருத்தமாக உள்ளது.

நிகழ்வு இரண்டு

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுளை உறுதிச்செய்திருக்கிறது நீதி. மகிழ்ச்சியானது. நாவரசுவின் குடும்பம் ஒவ்வொரு முறையும் நாவரசு குறித்த தகவல் வெளியாகும்போதும் கூடுதல் துயர் கொள்ளும் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

Saturday, April 9, 2011

ஆதரவு..



வணங்குகிறேன்.

ஆதரவுக்கரம் நீட்டுகிறேன்.

உங்களின் முயற்சி வெற்றிபெறும்.சத்தியம் தோற்றபதில்லை.

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம். நேர்மையான அரசியல் அமைப்பும் உண்மையும் உழைப்பும் பெருகி பாரதம் செழிக்கட்டும்

அன்னா உறசாரே..

வணங்குகிறேன்.

மகிழ்ச்சி பரிமாறல்...



என்னுடைய மகன் க.அ.குகன் தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழ்கத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி மூன்றாமாண்டு படித்து வருகிறான். இயல்பிலேயே ஆராய்ச்சி மனம் கொண்டவன். அவனுடைய திட்டமாக ஒரு ஆராய்ச்சியை முடித்துள்ளான். இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவே அதுபற்றிய எச்சரிக்கையை கைபேசி வழியாகத் தெரிவித்து மாரடைப்பு வருவதற்கு முன்னதாகவேத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். இதற்கெனக் கைபேசியின் ப்ளூடூத் வழியாகக் கண்டறியும் வகையில் ஒரு பயோசென்சாரை வடிவமைத்திருக்கிறான். இதுகுறித்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகத்திலும் (ஐஐடி) அதனைத் தொடர்ந்து சில கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்துள்ளமைக்கு சிறந்த ஆய்வு என்பதற்கான பரிசு வழ்ங்கியுள்ளார்கள்.

இதுகுறித்து அவனுடைய நேர்காணல் 7.4.2011 நாளிட்ட எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அவனுடைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் கைபேசி தயாரிப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மனித குலத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் அதுதான் வாழ்வ்தின் அடையாளம் என்று சொல்லி மேலும் புற்றுநோய் தடுப்பிற்கும் ஏதாவது சிந்தனை செய் என்று வேண்டுகோள் வைததிருக்கிறேன்.

மேலும் மரபு சார்ந்த இசையிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உள்ளவன். அதேபோன் நல்ல கவிதைகளை இனங்கண்டு மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வான். உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ம்கிழ்ச்சியுடன்.