Sunday, December 5, 2010

சுமை





காய்கறிகளைச் சாப்பிடும்
சுவையைவிட விலை
சுமை...

சுவைக்குள்ளும் பல
சூட்சுமங்கள் சுமை...

பெய்யாமல் கெடுத்ததுபோக
பெய்து கெடுக்கிறது மழை
செய்யும் எந்த வேலையும்
மழையில் சுமை...

நீண்ட சரக்கு ரயிலைப்போல
ஊழல் ரயில்
பெட்டிகள்தோறும் விதவிதமாய்
ஊழல் சரக்குகள்...

வண்ணவண்ண விளையாட்டுக்கள்
வானவில் ஜாலங்கள்

கொஞ்சம் எலும்புகள்
கொஞ்சம் சதைகள்
கொஞ்சம் ரத்தம்
இதுதான் மனிதன்
சாப்பிடவும் முடியாமல்
துர்ங்கவும் முடியாமல்
சுகப்படவும் முடியாமல்

நாளெல்லாம் பொழுதெல்லாம்
ஏறிகொண்டேயிருக்கிறது
சுமை...சுமை...
சுமைகளைத்தவிர
வேறொன்றுமில்லை..

வருத்தம்




வருத்தமாக இருக்கிறது
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.
நினைக்க நினைக்க
வருத்தம் பொங்கி வருகிறது.
பொங்கி பொங்கி வருகிறது வருத்தம்.
வருத்தம் கொள்ளும் தருணங்களில்
வருத்தப்படும் எல்லாமும்
வருத்தப்படுவதற்குரியதாய்
இல்லாமலிருப்பதோடு
கேலிக்கும் கேவலத்திற்கும்
ஆளாக்கிவிட்டு நிற்கும்நிலைமை
எண்ணியே
வருத்தமாக இருக்கிறது.

கவனிக்க..கவனிக்க..



திசம்பர் அம்ருதா இதழில் ஒரு கட்டுரை முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பு கிரந்தப் புயலில் சிக்கிய தமிழ் என்பதாகும். அதன் சுருக்கத்தை மட்டும் தருகிறேன்.

ஒருங்குகுறி சேர்த்தியம் தமிழ்மொழிக்கு வழங்கியுள்ள 128 இடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 56 இடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26 ஐச் சேர்க்கும்படியும் தமிழுக்கே உரியதான எ,ஒ,ழ,ற,ன ஆகிய எழுத்தொலி வடிவங்களைக் கிரந்த அட்டவணையில் சேர்க்கும்படியும் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சிறீஇரமணசர்மா ஒருங்குகுறி சேர்த்தியத்துக்கு அனுப்பிய முன்மொழிவில் தொடங்கி கலைஞர் கடிதம் வரைக்கும் சர்ச்சைகள் பற்றியது. அவசியம் எல்லோரும் வாசித்து இதுகுறித்து எழுதவேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தமிழ்மொழிக்கான ஆபத்தையும் உணரவேண்டும்.